தெல்லிப்பளை வசந்தபுரம் பகுதியில் நோர்வே 50 வீடுகள் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளவாலை, வசந்தபுரம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர், வீடுகளுக்கான பத்திரங்களை வழங்கினார்.  நோர்வே நாட்டின் 90 மில்லியன் நிதி உதவியுடன் யூ என் டி பி நிறுவனத்தின் மூலம் இவ் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வீடும் 7 இலட்சம் பெறுமதியில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வுகளில், இலங்கைக்கான நோர்வே தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர் மார்ட்டி ரொக்னேஸ், யூ என் டி பியின் பிரதிநிதி மசிமோ டயான, அரசாங்க அதிபர் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும் !

காஷ்மீரில் பண்டிட்கள் தங்களுக்கென தனி தாயகமே நிரந்தரமான தீர்வாம்!

காஷ்மீரில் பண்டிட்கள் என்னும் இனத்தவர் நெடுங்காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் அவர்களை அந்நிலப்பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் விரட்டி வெளியேற்றினர்.இதையடுத்து பண்டிட்களை மீண்டும் அப்பகுதிகளில் மீள்குடியமர்த்துவதற்கான முயற்சிகளை காஷ்மீர் அரசு மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு கட்டமாக, சில நகர் பகுதிகளை ஒதுக்கித் தருவதாக காஷ்மீர் அரசு அறிவித்தது. ஆனால் இதை ஏற்க பண்டிட்கள் மறுத்துவிட்டனர்.அவர்கள் கூறுவதாவது, காஷ்மீரில் தங்களுக்கென தனி தாயகமே நிரந்தரமான தீர்வு எனவும், தற்போது அறிவித்திருக்கும் தீர்வை ஏற்க இயலாது எனவும் பநுண் காஷ்மீர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் தனி நபரொருவருக்கோ, குழுவுக்கோ நகரை வழங்குவதை ஏற்க இயலாது எனவும் காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் காஷ்மீரில் மீள்குடியமர்வதற்கு காஷ்மீரில் தனி தாயகமே தீர்வு என்று பநுண் காஷ்மீர் இயக்க தலைவர் அஸ்வாணி குமார் சாருங்கோ தெரிவித்தார்.இது மிக தீவிரமான பிரச்சினை என்றும் இது குறித்து அரசு பிரிவினைவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதை ஏற்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும் சுருங்கோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை துருக்கியுடனான நட்பு!

துருக்கியுடனான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை துருக்கிக்கான முதலாவது தூதுவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான மறைந்த மனோ விஜேரத்னவின் மகன் பார்த்தி விஜேரத்ன துருக்கிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.பார்த்தி விஜேரத்ன இதற்கு முன்னர் துருக்கிக்கான இலங்கையின் கொன்சூல் ஜெனரலாக பதவி வகித்து வந்தவராவார். 2008ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது.இலங்கையின் தேயிலை விற்பனையிலும் துருக்கி பாரிய பங்கை வகிக்கிறது.

பெரியார்தாசனின் உள்ளப்பதிவு!

தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக்!

யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்துக்கு நிலத்தடி நீரை பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள்!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க ‘உலகத்தை அணிதிரட்டுவோம்’ என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும் இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது. எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும்  வரமுடியாது’ என்றார்.

யாழில் இப்படியும் நடக்கின்றதா!

சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் பேதம்!

சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் பேதம்!

சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பேதம் மோசமாக காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந் நாட்டு கலாச்சார அமைச்சர் lena adelsohn liljeroth நிர்வாண பெண் வடிவிலான கேக் ஒன்றை வெட்டி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.கறுப்பின பெண் வடிவில் அமைந்திருந்த கேக்கின் பெண் உறுப்பு பகுதியில் கத்தியால் புன்முறுவலோடு கேக்கை வெட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தினால் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

Follow

Get every new post delivered to your Inbox.